Click Here to Verify Your Membership
First Post Last Post
Desi சிறந்த சரித்திர தமிழ் காமகதைகள்

வரலாற்றின் பெரிய பக்கங்களில் தனக்கென ஓர் இடம் பதிக்க நினைத்தவன் இங்கு காயங்களோடு தனியாக தன்னந்தனியாக போய் கொண்டிருக்கிறான்...

அவன் முகத்தில் ஏற்பட்டிருந்த காயத்தின் வழியே குருதி வெளிவந்து கன்னங்களில் ஓடி உறைந்து கொண்டிருந்தது... அவன் சல்லடங்களில் ஏற்பட்டிருந்த பிளவுகளில் இருந்து ஏதோ மிகப்பெரிய தாக்குதலில் இருந்து தப்பி வந்திருக்கிறான் என்று உணர்த்துகிறது... அவனின் சவரம் செய்யபடாத முகம் அவன் சவரத்தை வெறுத்தான இல்லை அத்துணை நாட்காளாக அவன் அலைந்து திரிகிறானா தெரியவில்லை....

அவன் தன்னுடைய குதிரையை விரட்டவும் இல்லை...அவனின் மனம் அறிந்தோ என்னவோ குதிரையும் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது... அவனின் அரைகச்சையில் இருந்த குருவாளின் கைபிடியில் இருந்த அலங்கார வேலைப்பாடுகளும் அதில் பதிக்க பட்டிருந்த முத்துக்களும் பவளங்களும் அவன் அப்படி ஒன்றும் சாமானியப்பட்டவனில்லை என்று உணர்த்தியது... அவன் இடையில் தொங்கிய வாளின் அகலமும் பருமனும் இதை தூக்கி சுழற்ற கூடியவன் மிகவும் பலசாலியாகதான் இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.. அவனின் நீண்ட நாசியும் கூர்மையான கண்களும் அவற்றின் தீட்சண்யமான பார்வையும் எதையோ சாதிக்க பிறந்தவன் இவன் என்பதை உணர்த்துகிறது... அவன் கைகளில் இருந்த வடுக்களில் இருந்து அவன் பல சண்டைகளில் ஈடுபட்டவன் என்பதை உணர்த்துகிறது....

அந்த முகத்தில் இருந்த சிறு கவலையும்... அதை தாண்டி அவன் முகம் காட்டிய உணர்ச்சிகள் அவன் ஏதோ தீவிரமாக சிந்தித்து கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்துகிறது...

காடும் காட்டின் வழியே கேட்டுக்கொண்டிருந்த மிருகங்களின் குரல்களும் அவன் சிந்தனையை கலைக்கவில்லை...

இதை மட்டுமல்ல இந்த சிந்தனையால் அவனை தொடர்ந்த ஆபத்தையும் அவன் அறியவில்லை...

குதிரை முன் செல்லாமல் நின்று விட்டதை அறிந்து நிகழ்வுக்கு வந்தவன், குதிரை தன் கால்களால் தரையை தட்டுவதில் இருந்து “என்ன வேண்டும்....” என்று குதிரையின் காதின் அருகே குனிந்தவன் அதன் வாயில் இருந்து பொங்கிய நுரைகளில் இருந்து குதிரையின் களைப்பை உணர்ந்தவன் குதிரையின் மேலிருந்து குதித்தான். ஆறடி உயரமான இவனுக்கு ஏற்ற அரபிய உயர் சாதி புரவி... அதன் இடை இவன் தோள் உயரத்திற்கு இருந்தது...

காற்றில் இருந்த சிறு சாரலும் சல சலவென்று எழுந்த ஒலியும் அருகில் சிற்றோடை இருப்பதை உணர்த்த... குதிரையின் கடிவாளத்துடன் இணைக்க பட்டிருந்த தோள் கயிறுகளை பிடித்து கொண்டு முன்னே சென்றான்... களைத்து போயிருந்த அந்த குதிரை தன் உயரத்திற்கு ஏற்ற நீண்ட கழுத்தை நீட்டி அந்த ஓடையில் வந்து கொண்டிருந்த பளிங்கு போன்ற நீரை அருந்த ஆரம்பித்தது... அவனும் முழங்காலிட்டு தன் இரு கைகளையும் ஊன்றி நீர் அருந்த அதை முத்தமிடுவது போல் குனிய....

“விஷ்........” என்ற ஒலியோடு அவன் தலைக்கு மேல் வளை எறி சென்றது.....

Quote

தன் தலைக்கு மேலாக சென்ற வளரியின் ஓசையை உணர்ந்த அந்த இளைஞனின் உடல் முழுதும் சிலிர்த்து உறுதியுடன் விரைத்தது. தன் வலது கையால் அனிச்சை செயலாய் இடையிலிருந்த வாளை உருவினான்.

பின்னால் இருந்து தாக்க முயலும் அந்த பேடிகளை பார்க்க வளரியின் திரும்பி போகும் பாதையை பார்த்தான்...

அங்கு சிலர் வேல்களுடன் அவனை நோக்கி நகர முற்பட்டனர்...

ஆயுதம் வீரத்தை அளித்துவிடுவதில்லை.... பேடிகளுக்கு எந்த ஆயுதமும் வீரத்தை அளிக்க மாட்டா....

அவர்கள் ஆரிருவர் இருந்தாலும் அத்துணை பேர் முகங்களிலும் பயத்தின் சாயை இருந்தது... பயம் வீரத்திற்கு எதிரி...

திரும்பி சென்ற வளரி அவற்றின் தலைவன் போல் இருந்த அந்த ஆஜானுபாகுவான முரடனின் கையில் சிக்கியதில் இருந்து அதை எறிந்தவன் அவனே என்பதை அறிந்து கொண்டான்.

அவர்களில் சிலர் முன்னேற முற்பட்டனர்...

முன்னேறியவர்களை தடுக்கும் பொருட்டு பேச்சை வளர்க்க முற்பட்டான்...

“பின்னால் இருந்து தாக்க முற்படுவது தமிழர்களின் பழக்கம் அன்று...”

அவசரக்காரனும் முட்டாளுமான அந்த தலைவன்....

“நான் முத்தரையன்....”

களப்பிரர் வழிவந்த முத்தரையன் தாம் தமிழன் என்று அக்காலத்தில் ஒத்து கொள்ளுவதில்லை..

Quote

கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் ஆண்ட களப்பிரர்கள் தமிழர்களுடைய வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்கு சொந்தகாரர்கள். பாண்டியன் கடுங்கோ அவர்களை அடக்கினான்...

அவர்கள் நிதானித்து பக்கத்திற்கு நான்கு பேர்களாக சுற்றி வளைக்க முற்பட்டனர்... மூன்று புறமும் அவர்கள் அவனை தங்கள் வேல் கம்புகளுடன் நெருங்க....

இளைஞன் தனது உடை வாளை கையில் ஏந்தி நின்றது... செந்நாய்களின் முன் புலி நிற்பது போன்று இருந்தது...

வலப்புறம் இருந்தவர்கள் வேலை உயர்த்தி அவன் மீது வீச....

சற்றே பின் நகர்ந்து தன் வாள்வீச்சால் வந்த வேல்களை இரு துண்டுகளாக்கி விழ வைத்தான்...

இடப்புறம் இருந்தவர்கள் அவன் மீது வேலினை எரிவதா... வேண்டாவா... என்று குழம்பி நிற்க...

இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்ட இளைஞனின் வாள் சற்றே முன்னேறி வலப்புறம் இருந்தவர்களின் அங்கங்களை காயப்படுத்தியது... அவர்களின் அலறல் சத்தம் இடது புறம் இருந்தவர்களை மேலும் தயங்க செய்ய...

“அடேய்... முட்டாள்களா... வேலினை வீசாமல் நெருங்கி சென்று தாக்குங்கள்....” என்று கத்த

இடது புறம் இருந்தவர்கள் வேலின் துணையோடு அவனை நோக்கி முன்னேற அவன் முன்னால் இருந்தவர்களும் முன்னேறினர்..

Quote

பின்னால்... ராஜ்ஜியங்களை ஆள நினைத்தவன் அன்று தன் காலில் இடறிய கற்களின்பால் கவனம் தடுமாற... அந்த சிறு சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டான் முட்டாள்களின் தலைவன்... முட்டாள்களுக்கும் சில நேரம் துரித யோசனை அவர்களை அறிவாளியாக்கி விடுகிறது...

முன்னால் இருந்தவர்களின் வேல்களோடு இளைஞனின் நெஞ்சில் வேலை அழுத்தி....

இடிசிரிப்புடன்...

“விஜயா... உன் வாளை கொடுத்துவிடு.... இன்று வசமாக சிக்கி கொண்டாய்...”

அவர்களை அருகில் வரவழைக்க.... இளைஞன் மேற்கொண்ட தந்திரம் என்பதை அறிந்திருக்கவில்லை.... அங்கு நடப்பவற்றை பார்த்து கொண்டிருந்த மான் விழியாளும்தான்...

அவன் நெஞ்சில் வேலினை வைத்தவர்கள் “ஆ....” வென்று அலறி சரிய

அந்த தலைவன் மட்டுமல்ல இளைஞனும் குழப்பமடைந்தான்...

விழுந்தவர்களின் நெஞ்சில் தைத்து இருந்த அம்பினை கண்ட இளைஞன் திரும்பி பார்க்க....

Quote

இத்துணை லாகவமாக அம்பு எய்ய கூடியவள் ஒரு பெண்ணா...

வில்லை ஒத்த புருவமும்... பாண்டியனின் இலச்சினை இவள் கண் குளத்தில் சிக்கி கொண்டதோ...

அந்த கூர்மையான நாசி வேலின் முனைகளை நினைவு படுத்துகிறதே...

அந்த நாசிகளின் கீழே போர்களத்தில் வெட்டுண்ட தேகத்தில் இருந்து கொட்டும் உதிரம் போல் சிவந்த உதடுள்...

அவள் காதில் அணிந்திருந்த வளையங்கள் வேலின் முனைகளில் பூட்டியிருக்கும் பூனை நினைவு படுத்தியது...

போர்க்களத்தில் போர் தொடங்க ஊதும் சங்கினை ஒத்த கழுத்தும்... அதற்கு கீழே அவள் அணிந்திருந்த மார் கச்சையில் இருந்து அவள் உயர் குடும்பத்தை சேர்ந்தவள் என்று உணர்த்தியது... கச்சைகளுக்கு கட்டுப்படாமல் திமிறிய கன பரிமாணங்கள் தெரிந்த பாகத்தை விட தெரியாத பாகத்தின் மேல் கற்பனை கொள்ள செய்தது...

கச்சை களுக்குள் புழுகினை1 மறைத்து வைதிருக்கிரளோ... இல்லையில்லை தாமரை மொட்டு என நினைத்து வண்டுகள் அங்கே அமர்ந்ததை அறியாமல் கச்சை அணிந்தாலோ...மலர் செண்டோ.. அதன் மீது கவிழ்த்து வைக்க பட்ட மனோரஞ்சிதாமோ...? காந்தளின் மென்மைக்கு போட்டி போடும் கைவிரல்களில் இருந்தா இவ்வளவு வலுவுடன் அம்பு எய்ய முடியும்... அத்திப்பூ இடை கொண்டு அதிலே மையத்தில் மகிழம்பூ வைத்தானோ... அகத்தில் கல்லாடனார் சொல்லாடியது இவன் நினைவிற்கு வந்தது...

அந்த நேரத்தில் அவள் சாய்ந்திருந்த மரத்தின் ஊடே வந்த பகலவனின் கதிர் அவளின் அழகை பார்க்க இலைகளின் ஊடே மறைந்து வருகிறானோ.... அவளின் கருங்குழல்கள் காற்றில் ஆட.... இவன் இதயமும் ஆடியது...

எத்தனையோ போர்களில் வேல் அம்புகளை தகர்த்து எரிந்தவனை... வீழ்த்த இவள் விழியம்பு கொண்டிங்கு வந்தாள்.... கண்ணோடு கண் நோக்க...

விழியம்பு கொண்டு தாக்கியவள்... இவன் பார்வை பட்டு குனிந்ததை தமிழும் நாணம் என்றது...

பார்வையில் பல பாஷைகள் பேசியவர்கள் ஆபத்தை மறந்தனர்.... இருக்கும் இடம் மறந்தனர்....

இவன் தலையில் “நங்......” என்று கட்டாரியோன்று தாக்க... மெல்ல சரிந்தான்...

Quote

சலசலக்கும் நீரின் ஓசை, நீர் திவலைகள் சில தெரித்து முகத்தில் தெளிக்க...

விஜயனுக்கு சற்றே நினைவுலகிற்கு வர முயன்றான்...

நீர் திவலைகள் பட்டதால் தான் நாவாயில் செல்கிறோமோ... அலைகள் நீர் திவளைகளை தெளிக்கின்றன... இது நிச்சயமாக நாவயாகத்தான் இருக்க வேண்டும் இல்லை என்றால் இந்த ஆட்டம் வேறு எப்படி ஏற்பட முடியும்....?

உடல் எதோ பஞ்சனையின் மீது மோதுவது போல் அல்லவே இருக்கிறது.... ஆனால் இந்த உணர்வு ஏன் தன் தோள்களிலும் புஜங்களிலும் மட்டும் ஏற்படுகிறது...? உடல் எதோ கனமான ஒன்றின் மீது இருப்பது போல் அல்லவா இருக்கிறது... இது நிச்சயமாக நாவயாக இருக்க வேண்டும்... நாவாய் கவிழ்ந்திருக்க வேண்டும்... தான் பஞ்சனையின் மேல் இருந்து கீழே உருண்டு இருக்கவேண்டும்.... அதனால் தான் பஞ்சனையின் மீது மோதியபடி வருகிறோம்....! கலம் மூழ்குவதற்கு முன்பாக தப்பித்தாக வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்ல எழ முயன்றான்..

தலையில் விண் என்ற வலி ஏற்பட்டதும்....

ஓ... வேல் விழியால் அல்லவா தாக்கப்பட்டோம்....

அவள் யாராக இருக்க முடியும்?

உரம்பையா... ஊர்வசியா.. இல்லை நமக்கு பெயர் தெரியாத தேவ கன்னிகள் வேறு யாரோகவோ இருக்கவேண்டும்..

இல்லை இறப்பிற்கு பின் நம்மை அழைத்து செல்ல புஷ்பக விமானத்தில் வந்து அழைத்து செல்கிறார்களோ... அப்படி என்றல் தேவர்கள் வராமல் ஏன் தேவ கன்னிகளை அனுப்பி இருக்கிறார்கள்..

போர்களத்தில் மடிந்தாலாவது அப்படி அழைத்து செல்ல வழி இருக்கிறது...

Quote

இப்படி அவன் யோசித்த போது நடந்த நிகழ்வுகள் மெல்ல மெல்ல நினைவிற்கு வந்தன...

வில்லவனுக்கும் தனக்கும் ஏற்பட்ட தகராறு.... நேரடியாக மோத முடியாத அவன் வஞ்சகமாக விஜயனை கொல்ல முயன்றது...

சற்றே பெரிய நீர் திவலைகள் முகத்தில் அறைய....

கண்களை மெதுவாக திறந்தான்...

கண்களில் கண்டது காவிரியின் கோடை கால நீர் பரப்பும் அதில் சற்றே மூழ்கியபடி பாதங்களின் விளிம்புகளில் மருதாணி சாறு பூசியதால் சிவந்த கால்களா... இல்லை நீரில் நனைந்து அவள் ஆடுதசைகளை மூட முயன்று தோற்ற தமிழகத்தில் யவனர்கள் வந்து விரும்பி வாங்கும் மெல்லிய பஞ்சாடைகள்..

தமிழகத்தின் பஞ்சாடைகள் மெல்லிய மேன்மையானவற்றிற்கு பெயர் பெற்றவை... இதில் நனைந்த ஆடைகள் அவள் சிவந்த ஆடுசதைகளின் கிறங்கி போய் அவளை இறுக்கி அனைத்து கால்களை விடமாட்டேன் என ஒட்டியிருந்தன..

கண்களை மட்டும் மெதுவாக மேல கொண்டு சென்று மற்ற அழகையும் பார்க்க முயன்ற விஜனை நானையாத ஆடையும் இரட்டை மடிப்பாக இருந்த உடையும் அவன் எண்ணத்தை தடை செய்து... ஆவலுடன் வந்து ஏமாந்த குழந்தை போல் ஆனான்...

கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவு மென் முலையள் கொடிக் கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ

பார்த்தவுடன் படக்கென்று அனைத்துக்கொள்ள தோன்றும் வனப்பான தேகமும்,குவித்து வைக்கப்பட்ட மிருதுவான மார்பு முலைகளும், நன்கு வளந்த கொடி படர்ந்து தொங்குவது போன்ற கூந்தல் அழகும் கொண்ட அவளை என்னால் மறக்கவே முடியவில்லை.. புலவர் ஆந்தையார் சங்க பாடலில் எழுதிய நிலைமையை அடைந்தான்...

குதிரையின் மீது தான் கிடந்ததையோ அவை காவிரி ஆற்றை கடந்து செல்வதையோ அவன் உணரவில்லை...

Quote

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

நினைத்த அளவிலே உணர்வு அழியாமல்உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலேஉணர்வு அழிய உள்ளம் கிளர்தலும்கள் உண்பவர்க்கு இல்லை; காதல்வசப்பட்டவர்க்கே உண்டு.

என்ற வள்ளுவன் வாக்கினை அவன் இங்கு முழுமையாக உணர்ந்தான்...

உணர்ந்தான் என்று சொல்லுவதை விட மயங்கினான் என்பதே பொருத்தமாக இருக்க முடியும்.

குதிரை நின்றதை அவன் உணர்ந்து அவனும் இறங்க முற்பட்டதை அறிந்த அவள்... இவ்வளவு நேரம் நினைவுடனா இருந்தார்.... அவன் உடல் தன் அங்கங்களில் உராய்ந்து வந்ததை நினைத்து.... ஐயகோ அவராவது சொல்லி இருக்கலாம் என்று நினைத்து வெட்கத்துடன் ஓடி மறைந்தாள்.

விஜயனும் குதிரையை விட்டு மெதுவாக இறங்கி சூழலை பார்க்க முயல...

அவனை விடவும் உயரமான அந்த ஆஜானுபாகுவான மனிதரை கண்டு வியந்தான்...

அந்த மனிதனின் கண்களில்தான் எத்துனை தீட்சண்யம்... அவரின் பார்வை விஜயனை குறுகுறுக்க வைத்தது... யாரிவர்..? பழுவூரார்ராக இருக்கலாமோ?

"நாட்டை ஆள ஆசைப்படுபவனுக்கு... இத்தனை தடுமாற்றம் ஆகாது விஜயா...."

தன்னை பெயர் சொல்லி அழைத்ததும் சற்றே நிதானித்த விஜயன் அவர் தடுமாற்றம் என்று சொல்லியது தான் குதிரையில் இருந்து இறங்கியதை சொல்லுகிறாரா இல்லை அவன் மனதில் இருந்த தடுமாற்றத்தை உணர்ந்து சொல்லுகிறாரோ என்று அச்சமேற்பட்டது....

"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது...." என்றான் சீற்றத்துடன்.

"அவசரக்காரனுக்கு புத்தி மட்டு...."

"இது புலியின் சீற்றம்...."

"கோபம் மனிதனை நிதானம் இழக்க செய்கிறது... அதைவிட மோகம் இன்னும் மோசம்... அவன் புத்தியை முழுவதுமாக மழுங்கடித்து விடுகிறது..."

அவர் தான் குதிரையில் அந்த பெண்ணுடன் வந்ததை சொல்லுகிறார் என்பதை உணர்ந்து...

"தாங்கள்...."

"பழுவூரான்...."

மேற்கொண்டு பேச முற்பட்டதை தடுத்து "விஜயா முதலில் உன் காயங்களுக்கு மருந்திடுவோம்.... பிறகு பேசலாம்...."

இதை அவர் கூறியதும் தன் பின் தலையில் கைவைத்து பார்த்த போது அவன் கைகள் உதிரத்தால் நனைந்தன...

Quote

தலையில் கை வைத்த விஜயன் உதிரத்தில் நனைந்த கைகளை கண்ட என்ன நடந்திருக்கும் என உணர முற்பட்டான்...

வில்லவணனின் தாக்குதலில் தலை காயம் பட்டதை உணர்ந்த அவன் எவ்வாறு தாம் இங்கு அழைத்து வரப்பட்டோம் என்று தெரிந்து கொல்ல முயன்றான்..

அவன் அந்த வேல்விழியாளின் பார்வை பட்ட பிறகு அனைத்தையும் மறந்த்ததை எண்ணி வியந்தான்... இதுவரை வனமுலை(பாலை10), வனைந்து ஏந்து இளமுலை(பாலை 29), நல் அக வன முலை(பாலை 33), ஏர் இள வனமுலை(குறிஞ்சி 160), வண்டற் பாலை வனமுலை(நெய்தல் 191), குலவு முலை(மருதம் 350), குறுந்தொகையில் அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலை(71), உறுத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில்(276), இன்னுறழ் இளமுலை(314), வீங்கு முலை(344), ஐங்குறுநூற்றில் காதற் குழவிக்கு ஊறுமுலை(92), தும்பை மாலை இளமுலை(127), அகநாநூற்றில் ஆகவனமுலை அரும்பிய(6), முலை முகம் செய்தன முள்ளெயிறு இலங்கின(7), தேம்கொள் மென் முலை(26) இப்படியாகவும் பத்துப்பாட்டில், குவி முகிழ் இளமுலை(முருகு 35) ஈரக்கும் இடை போஆ ஏர் இள வனமுலை(பொருந 36) அணிமுலை(சிறுபாண்2) கவை முலை(பெரும்பாண் 358) வீங்கு முலை கடுப்ப(நெடுநெல் 120) முகிழ் முலை(பட்டின 296) வனை புனை எழில் முலை(மலை படு 57) சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட அனைத்து வகை அழகினையும் அவன் அறிந்திருந்தாலும் இவள் மார்கச்சையில் மறைந்திருந்த அழகும் அதை அறிய ஆசைப்பட்டான்...

அவளை நினைத்த நேரத்தில் அனைத்தும் மறந்த்ததை உணர்ந்த அவன் இனிமேல் அவளை பார்க்க கூடாது நினைக்கவும் கூடாது... ஆனால் அவள் கூறாமல் என்ன நடந்தது என்பதை கூற வேறு யாராலும் முடியாதே... என்ற சிந்தனையோடு நடந்தான்...

Quote

பழுவூராரும் சிந்தித்தவாறே நடந்தார்...

இவள் நாணபட்டது.... இதுவரை பழுவூரார் கண்டது கிடையாது.. ஆண் மக்கள் போலவே வளர்ந்த அவள் ... குதிரையேற்றம்... வாள் வீச்சிலும் களரியில் நல்ல தேர்ச்சி பெற்றவள்... அவளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து மகிழ்ந்தவர்... இன்று அவள் நாணபட்டது கண்டு தீர்க்க சிந்தனையில் ஆழ்ந்தார்..

இது வரை தம் வாழ்க்கையில் எந்த பிரச்சனையிலும் கலந்து கொள்ளாது ஒதுங்கியே வாழ்பவர்... அந்த அமைதியை இவளின் புது நட்பு கெடுத்துவிடுமோ... அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்தாலும்... நம்மை சுழற்றி அடிக்காது விடாது போல் இருக்கிறதே...

இவ்வாறாக சிந்தித்து பெருமூச்சு விட்டார்...

அதே நேரத்தில் விஜயனும் இவளை நினைத்து பெருமூச்சு விட்டான்...

இரு மனிதர்கள் இருவரும் ஓரிடத்தில் இருந்தாலும் இருவரின் மனமும் இருவேறு திசையில் சிந்திக்கிறது... இரு வேறு சிந்தனைகளுக்கும் வயதுதான் காரணம்... அவரவர் வயதிற்கு ஏற்ற சிந்தனை.. பொறுப்பும் கடமையும் நாற்பதுகளில் இருந்த பளுவூரானுக்கு என்றால்.... இறுபதை தொட இருந்த விஜயனுக்கு பருவத்திலே வரும் ஆசைகள் அவன் சிந்தனையை இவள் பேரில் திருப்பியிருக்கிறது... இதில் எத்தனை விந்தை இருவருமே சிந்தித்தது ஒரு பெண்ணை பற்றியது...

சிந்தித்த படி வந்த விஜயன்.... வாசற்படி வந்ததுமே நிகழ் உலகிற்கு வந்தான்...

Quote






bur ka baalxxx indian porn mmsindian mallu aunty photosnew desi kahanipunjabi sexi storyinternet cafe scandalsTelugu lanjala Karke banta haitelugu family sex kathalubhavi ki chudayifamily sex golpoamature indian sex videosdesi kahani hindibest desi mmswww.feer xxx.commilk boobesindian aunty loversbava moddax videos sheelaunty kerela auntiesvasana hindi storypinoy kalibugan storiessaree boob picsbollywood celebrity fakesgroup sex ka mazatamil xxxnexbii sexy storytamil homely sexmaa sex story hindibollywood actor nude picturedesi malayalamsex hindi kahaniyameri suhagraatdesi stories behanbondhur ma ke chodar golpopyasi behansexy sotaryww.desi girl.comaunties backsidetamilsex storieybooby actressaunty pic exbiiअधुरी जवानी बेदर्दकहानीtamil aunti kundi mode eathuvathu epatinina mercedez threadmaakichudaima ki chudaisuhagraat ki moviehairy armpit picsbalatkar storiesxxx hindi storisexy story in urduesex stories in tamil pdfbollywood actress nip slip picsusar nay chodaindian girl stripping sareeurdu desi sex storiestelugu new xxxindian nudeclub.comindian sex marathitelugu sex stories kathalumarathi incest storiesnude oriya actresschennai college girlshot bhabhi hindi storysexy urdu story in urdu fontandhra mallu hotmilky boobs imagestamil fakessex chudai storiesgirls striping nakednew sex picture and sexcstory in hindisexy hindi desi storiesdesi school girls sexkaisa lga xxxadult stories hindi fontbangla chat golpogujaratisex videowww.sexantaravasna.comaunty sex kathalu in telugusexy images of hema malinidesifantasychudai sex story in hindimaa or betaindian suhagraat storiesread indian incest stories